மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

என்றோ விதைத்த 
அன்பின் சிறிய கன்றுகள்
வேர் விட்டு வளர்ந்தன
சற்றே பெரிய மரங்களாய்...

ஒவ்வொரு மரத்திலும்
ஒரு இனிய பெயர்...
சில ஆழமாய் நின்று
பல கிளைகளுடன் கூடி
நிழல் தந்து காக்க,

மேலும் சில....
ஒரே மரமாய் உயரமாய்
விண்ணை முட்டி நின்று,
மழை காற்றுக்கு
வளைந்து, நிமிர்ந்து
என்றைக்கும் மறவாத
நினைவுகளோடு

எப்போதாவது வெறுத்த
ஒவ்வாத நினைவுகள்
பல உதிர்ந்தன சருகுகளாய்
கொஞ்சம் குப்பைகள் சேர
கூட்டி அள்ளி குவித்து
தீயிட்டதில் கொஞ்சம் புகை
அல்லன போய் நல்லன நின்று
என் தோட்டம் சுத்தமாகியது

வசந்த்தின் வருகைக்கு
மீண்டும் தயாராகி
 
உள்ளத்தில் தென்றல் வீசும்
புதிய பெயர்களுக்கான
மரக்கன்றுகள் நடுவதற்கு.


14 comments:

வசந்த்தின் வருகைக்கு
மீண்டும் தயாராகி //
வசந்தத்தின் வருகையை வரவேற்கிறோம்.

வசந்தத்தை எதிர் நோக்கி ...

//அல்லன போய் நல்லன நின்று
என் தோட்டம் சுத்தமாகியது//

அருமை. நம் தோட்டம் சுத்தமாகுமா...?

நல்லா இருக்குங்க சாகம்பரி..
ஆனா மரச்சருகுகளைக் கூட்டி குவித்து எரிப்பது நல்லதல்ல என்று சொல்கிறார்கள். மரவளம் வின்சென்ட் அவர்கள் பதிவில் சொல்லி இருந்தார்கள். http://maravalam.blogspot.com/2011/02/blog-post_11.html

//வசந்தத்தின் வருகையை வரவேற்கிறோம்.//
வசந்தம் வரும்,தென்றல் வீசும். நம் எல்லோருக்கும். நன்றி இராஜராஜேஸ்வரி

வசந்தத்தை எதிர் நோக்கி .//
எப்போதாவது மனகுப்பைகளை அகற்றினால்தான், புது தளிர்களுடனான வசந்தத்தை அறிய முடியும். நன்றி திரு. எல்.கே

வணக்கம் வருகைக்கு நன்றி. திரு ஜீவன்சிவம். சுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணினாலே வழிமுறைகள் நம் மனம் தேடிவிடும். தியானம் ஒரு வழியோ...

வணக்கம் முத்துலட்சுமி வருகைக்கு நன்றி ! நீங்கள் சொன்னது சரிதான், எரித்தல் கூடாது. படத்தில் இருப்பது புகையல்ல , காலை .விடியல் நேரத்தில் சூரியனின் இளம் கதிர்கள், பனிமூட்டத்தை அகற்றிய காட்சிதான். கொஞ்சம் பொருத்தமாய் கவிதையை மாற்றிக்கொண்டேன்.

கை கொடுங்க சாகம்பரி,வேற எதுவும் சொல்லி
இந்த கவிதை அனுபவத்தை நான் கலைச்சுக்க விரும்பலை

என் கவிதை உங்கள் வாசித்தலில் உயிர் பெற்றது. நன்றி ராஜி

அருமையான கவிதை...

நன்றி திரு. கருன்

நல்ல கருத்து ..

வணக்கம் வருகைக்கு நன்றி திரு பிரபாஷ்கரன்