மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அதிகாலை நேர சோம்பல்
   களைத்துப் போன சமையல்...
யந்திரத்தனமான புன்னகைகள்,
    மந்தமான நினைவு சூழ் மதியம்
அலுவலக் களைப்போடு மாலை
   உறக்கம் மீறிய அயர்ச்சி ஆயாசம்
இரவில் தன்னோடு பேசி விழிப்பு
   மனதின் ரகசிய மூச்சுவாங்கல்
இத்தனையும் நினைவுபடுத்தும்
   தாய் வீட்டின் மீதான காதலை

கண்டித்தாலும் கவலைப்படாத
   காலை வேளை உன்னத உறக்கம்
பல் தேய்க்க எட்டி விரட்டும்
   அருமருந்தான கொதிக்கும் தேநீர்
குளியல் யோசனை மறக்கடிக்கும்
   குண்டுகுண்டாய் தும்பை இட்லி
மறந்துபோன கீரைகடையல்
   மலைக்கவைக்காத சாப்பாடு
அம்மாவின் மடி புதைந்து
   உறக்கத்துடன் கூடிய மதியம்
குழந்தை மனதுடன் வாசம் வீசும்
    மாலையில் சூடும் மல்லிகைச்சரம்
எனக்கான என் தேடல் மறைந்த
    மறுபிறவி புத்துணர்வுடன் துயில்

ஒரு ஓட்டத்திற்கு தயாராகும்
   விளையாட்டு வீராங்கனையாக
உள்ளேயும் வெளியேயும் ஆற்றி
   புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.
 

ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.  


30 comments:

புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.

ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.

chanceless lines...

thanks for sharing :)

புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.

ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.


அருமையாய் மனம் நெகிழச்செய்யும் கவிதை. பாராட்டுக்கள்.

நீல ரோஜா எப்படிச்செய்தீர்கள்.

பேனா இங்க் ஊற்றியா? பகிருங்கள் தோழி. நான் அப்படித்தானே செய்து கேலி செய்யப்பட்டேன்.

Thank you very much pappukkutti ( I always call kutties with this nice name )

இது பெண்களாகிய நம்முடைய உணர்வுகள்தான். நன்றி ராஜேஸ்வரி.

பூவின் காம்பை ப்ளேடு கொண்டு குறுக்காக வெட்டிவிட்டு, நீல இங்கில் ஊற வைத்தால் சிறிய வெள்ளைப் பூக்கள் தந்துகிக் கவர்ச்சியினால் நீலத்தை உள்ளிழுத்து வெளிர் நீலமாகிவிடும். ஆனால் ரோஜாவிடம் இதெல்லாம் பலிக்கவில்லை. என்னையும்தான் ரொம்பவும் கேலி செய்தார்கள்.

குண்டுகுண்டு இட்லி, கீரை கடையல் இப்பவும் அம்மாவின் கைமணத்திற்கு மனசு ஏங்கத்தானே செய்கிறது.

ஆனால்...
அம்மாவுடைய வீடு அதுவல்ல..

உண்மைதான். அருமையான கவிதை.

///ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல. ///
நான் உங்கள் கவிதையை படிக்கும் போதே நினைத்துகொண்டு வந்தேன் வேறு வடிவத்தில் , புள்ளி வைத்து கோலமிடும் ரசனையில் , கோலமிட்டு பின் புள்ளி வைத்தது அமர்க்களம் சகோதரி

இன்னும் கூட பட்டியல் உள்ளது. அது என்றைக்கும் அழியாத அம்மாவின் அன்பை நினைவூட்டும் பெட்டகம். நன்றி கடம்பவன குயில்

இறுதி வரிகள் கவிதயின் பாடு பொருளுக்கு கனம் கூட்டுகின்றன.

எல்லா பெண்டிர்க்கும் தாய் வீடு துறந்து
பதி வீடு புகும் தருணங்களின் வாய்த்திடும் மன சஞ்சலங்களும், எண்ண அலைவுகளும் வரிகளில் அழகாய் வந்தமர்ந்துள்ளன.

வாழ்த்துக்கள்.

கோலம் போட்டு புள்ளி வைப்பது...! எப்படி தெரியும் ? உண்மையில் இதனை எப்போதாவது செய்வேன். நன்றி சகோ.

கருத்துரைக்கு மிக்க நன்றி திரு.கருன்

வணக்கம் திரு.வருணன். புதிதாய் மணமுடித்த பெண் மட்டுமல்ல, எப்போதுமே அம்மா வீட்டின் காதல் சீராக வளர்க்கப்பட்ட பெண்களுக்கு இருக்கும். மன அழுத்தம் கூடும் வேளைகளில் கனவாவது காணும் மனம். கருத்துரைக்கு நன்றி.

அம்மா வீட்டின் சுகத்தை மிக மிக அழகாக
சொல்லிச் செல்வதில் உள்ள லயத்தில் சுகத்தில்
நான் மய்ங்கிக் கொண்டேவந்த வேளையில்
கடைசி வரியில் மண்டையில் சடேரென ஒரே தட்டு
யதார்த்தம் அப்போதுதான் கண்ணெதிரே விரிந்தது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கவிதையின் உணர்வினை ஒன்றி ரசித்து பாராட்டிய விதம் அருமை. நன்றி ரமணி சார்.

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ...

கவிதையை வாசித்து கொண்டே வரும்போதே, பாதி கவிதையில் வரும் போதே - பின்னூட்டத்திற்கான விஷயம் கிடைத்து இருந்தது. ஆனால் அதை கொண்டு தான் நீங்கள் கவிதையையே முடித்திருக்கிறிர்கள். நல்ல கவிதை.

அருமையான கவிதை...

MEE THE FIRSTU...

super...vaalththukkal

அருமையான கவிதை!
பெண்களுக்கு தாய்வீடு என்பது வரப்பிரசாதம்!
எல்லா அவசரங்களையும் மறந்து மனமகிழ்ந்து கொள்ளும் தற்காலிக சொர்க்கம்!
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!

yes , I agree. நாம் நம்மை சுற்றி இருப்பவர்களை கவனிக்கிறோம். வார்த்தைகளின் கோர்வை மட்டுமே எனக்கு உரிமை. கருவை பற்றிய சிந்தனை மற்றவர்களுக்கும் வந்திருக்கலாம். Thank you Sir.

நன்றி பிரகாஷ்

//MEE THE FIRSTU... //
Yes , welcome Siva.

To மதுரை சரவணன்,
வணக்கம். welcome Sir, Thank you

சட்டென என் தாயை நினைத்து என் மனம் கனத்து விட்டது மேடம்

வணக்கம் மனோ மேடம், வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அம்மா சம்பந்தப்பட்ட கவிதைகள் தானாகவே அழகாகிவிடுகின்றன. Thank you for the first visit.

ராஜி வருத்தப்பட தேவையில்லை ராஜி. இது மகளின் பார்வையில் எழுதப்பட்ட கவிதை. ஆனால் இதற்கு மறுமுகம் உள்ளது. அம்மாக்கள், ஒரு கட்டத்தில் தன்னை பற்றிய சிந்தனை மறந்து தனித்து இல்லாமல் குடும்பத்தின் ஆணிவாராகி விடுவார்கள். இதற்கான என் கவிதைதான் மூன்றாம் கோணத்தில் 'நிறமில்லா இயற்கைதான் நான்' என்று வந்துள்ளது.

அம்மாவின் வீடு எதுவென்று அழகாய் உணர்த்திவிட்டீர்கள். ஒவ்வொரு வரியிலும் ஓடிப்போய் தாய்மடியில் முகம் புதைத்துக்கொண்டு வெளிவர மறுத்து அடம் பிடிக்கிறது மனம். அருமை சாகம்பரி.

அம்மா என்ற வார்த்தை உணர்வுபூர்வமானது. நன்றி கீதா.