மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

ஒரு சிற்றோடை பிறந்தது
மலையரசனின் மகளானது
இயற்கை அன்னை தாலாட்டிட
எட்டி நடை போட்டு துள்ளியது!
குறுமரங்கள், செடி, கொடிகள்
கைவீசி வருடிட குறுஞ்சிரிப்பில்
மலையிலிருந்து குதித்தோடியது!

சற்றே அதன் துள்ளல் குறைந்து
சமவெளியில் அமைதியாக ஓட,
இன்னும் பல வயல்வெளிகளை
மரங்களடர்ந்த வனப்பகுதிகளை
கருணையுடன் ஈரமாக்கியது.
வேர்களின் தாகம் தணித்து
கரைகளில் பசுமை விரித்த
அழகிய ஓட்டத்தின் முடிவில்...
கை விரித்து வாரியது நீலக்கடல்!

உப்பு நீரில் கலக்கும் முன்
திரும்பிய கடைசி பார்வையில்
மலையும் தெரியவில்லை
தாலாட்டிய மரங்களும் இல்லை
சினேகமாய் ஓடியாடி வளர்ந்த
வெள்ளி மீன்கள் கூட துள்ளியோடின.
எதுவும் அதனுடன் வரவில்லை


உறவுகள் சேர்வதும் பிரிவதுமாக
நொடிகளும் யுகங்களுமாக மாறி
காலடியில் நழுவிய கணங்களில்
(வாழ்க்கை....)
கடத்தப்பட்டிருந்ததை உணர்ந்திட
நன்னீருடன் கண்ணீரும் சேர்ந்தது.
ஆனாலும்...
எங்கேயும் தேங்கி நின்றிடாத
நிம்மதியுடன் கடலில் கலந்தது.


எதையும் தனக்கென எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே பலமாக கொண்டு, குடும்பத்தின் நலனை  தன்னுடைய உயிர் மூச்சாய் நினைத்து,  இன்றைக்கும் கலாச்சார விருட்சத்தின் ஆணிவேரில் உரமாக தன்னை பகிர்ந்து தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை பெண்களுக்கும் மழை நேரத்து குளிர்காற்றையும் மண்வாசனையையும் குழைத்து 'மகளிர் தின வாழ்த்துக்களை ' இதமாக பகிர்கிறேன்.

16 comments:

மகளிர்தின வாழ்த்துக்கள் . பெண்கள் தியாகமே வடிவானதால்தான் உயிர்நாடியான நதிகளையும் உயர்வான நாட்டையும் பெண்களாய் போற்றுகிறோம். வாழிய மகளிர்!

நன்று சாகம்பரி! வாழ்த்துக்கள்!

nice

நன்றி கடம்பவனக் குயில். மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி.

உங்களுக்கு எந்தன் இனிய
“சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்”

பெண்களின் போற்றத்தகுந்த குணங்களைப் பற்றிய தங்களின் இந்தக்கவிதை வெகு அழகாக உள்ளது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

தலைமுறை உயர
பெண்ணின் புகழ் உயர
மகளிர் தின நல வாழ்த்துக்கள் சகோதரி…

///எதையும் தனக்கென எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே பலமாக கொண்டு, குடும்பத்தின் நலனை தன்னுடைய உயிர் மூச்சாய் நினைத்து, இன்றைக்கும் கலாச்சார விருட்சத்தின் ஆணிவேரில் உரமாக தன்னை பகிர்ந்து தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை பெண்களுக்கும் மழை நேரத்து குளிர்காற்றையும் மண்வாசனையையும் குழைத்து 'மகளிர் தின வாழ்த்துக்களை ' இதமாக பகிர்கிறேன்///.

இந்த பெண்களில் நீங்கள் ஒருவர் என்பதால் நீங்கள் மற்றவர்களை வாழ்த்தியவாறே நான் உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன் சாகம்பரி மேடம்

நன்னீருடன் கண்ணீரும் சேர்ந்தாலும், எங்கேயும் தேங்கி நின்றிடாத நிம்மதியுடன் கடலில் கலக்கும் சிற்றோடைகளுக்கு ஆத்மார்த்தமான கவிதாஞ்சலி.

மகளிர் தின வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும் தோழி.

கரண்ட் கட்னால ரொம்ப லேட்டா வந்து வாழ்த்துக்களை சொல்லிக்குறேன் தோழி. மகளிர் தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி VGK சார்.

#மகேந்திரன்
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரை தமிழன்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா.

அதேதான் என்னுடைய பிரச்சினையும் ராஜி. பவர்கட் ரொம்பவும் பாதிக்கிறது. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி தோழி.

கண்டிப்பாக வருகிறேன்.